ads

Sunday, 15 April 2018

எஸ்சி, எஸ்டி மக்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 27614 பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்
5 March
வழக்கு தொடரப்பட்டு அந்த தீர்ப்பில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியும் இன்று வரை அப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது.
தமிழக அரசு உடனடியாக எஸ்சி, எஸ்டி மக்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 27614 பணியிடங்களை நிரப்ப வேண்டும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விளையாட்டு துறையில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் போது அவர்களுக்கு அரசு பணிகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி அவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும், உயர் கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இதுவரை வழங்கப் பட்டு வந்த சிறப்பு உதவித்தொகை ரூ 85 ஆயிரத்தில் இருந்து தற்போது தமிழக அரசு மூலம் ரூ 50 ஆயிரமாக குறைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும்.
மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு வழங்க விரைவில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், அரசு பணிகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களை நீக்குவதற்காக மத்திய மாநில அரசுகள் கமிட்டி நியமித்துள்ளது, இதனால் கீழ்நிலை பணியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வகிக்கும் பதவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த கமிட்டி கீழ்நிலை பதவியில் உள்ள பணியிடங்களை
காலி செய்ய வேண்டாம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் போராட்டம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.... தமிழ்நாடு தலித் உரிமைகள்பாதுகாப்பு இயக்கம்
என்றும் மக்களுக்காக மக்களோடு மக்களாய் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்....

No comments:

Post a Comment