திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலயத்தில் உள்ள காவற்ப்பறையன் என்ற பறையரைப்பற்றிய தகவல்கள் சேர்க்க வேண்டுகின்றேன். இந்த ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அது காடாக(புன்செய் நிலமாக) இருந்ததாகவும் அந்த நிலத்தை காப்பாற்றியவன் காவல் பறையன் என்றும். புற்று ஒன்றை வெட்ட எத்தனித்த வேளையில் அதில் இருந்து பாம்பும் லிங்கமும் வந்ததாகவும் அதைத்தொடர்ந்து மணலூர் அரசன் உக்கிரபாண்டியன் அங்கு ஆலயம் எழுப்பியதாகவும் வேங்கடம் முதல் குமரி வரை எனும் நூலில் பக்கம் 176-ல் எழுதப்பட்டுள்ளது.
ஆக இந்த வரலாற்று தகவல் மூலம் பறையர்கள் மருதநிலத்திற்க்கு முன்பே புன் செய் நிலங்களை கட்டிக்காத்தவர்கள் விவசாயக்குடிகள் என்பதை உணர முடியும்.
No comments:
Post a Comment