நிரப்பப்படாத 10,000 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் தலித் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி – 9,945 பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. ‘தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான தேசிய ஆணையம்' இது குறித்து தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ஒன்பது மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு, தலித் மக்களுக்கான நிரப்பப்படாத இடங்களை இந்த ஆண்டு சூன் 30ஆம் நாளுக்குள் சிறப்பு நியமனத்தின் மூலம் நிரப்ப வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆனால், எந்த அரசுத் துறையோ நிறுவனமோ இந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு கடுகளவு அக்கறையும் காட்டவில்லை.
– ராதா வெங்கடேசன், ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்'
No comments:
Post a Comment